April 2, 2018

காமராஜர் சிலை திறப்பு

சிவகங்கையில் புதுப்பிக்கப்பட்ட காமராஜர் சிலை கடந்த 4 ஆண்டுகளாக திறப்பதற்கு அனுமதி இல்லாமல் மூடி கிடந்தது.தமிழ்நாடு நாடார் பேரவை பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் நாடார் சங்கங்களின் போராட்டத்தினால் கடந்த மாதம் சிலை திறக்கப்பட்டது.

அதன் காரணமாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும்
தமிழ் நாடு நாடார் பேரவை தலைவருமான என் ஆர் டி அவர்கள் நேற்று ( மார்ச் 30 ந் தேதி ) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சிவகங்கைக்கு நேரில் சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர் எஸ் வி ஆர் விஜய் மாரிஸ் சிவகங்கை மாவட்ட செயலாளர் சேசு பாஸ்கர் மாவட்ட அமைப்பாளர் கதிரேசன் மற்றும் பாலமுருகன் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜ் மற்றும் தமிழ் நாடு நாடார் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர்கள் கே.வெற்றிராஜன் வி கே வி பாலகுரு செ.முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு பெருந்தலைவருக்கு மரியாதை செய்தார்கள்.

About ptmkadmin