April 12, 2018

கருப்பு கொடி

உச்ச நீதிமன்ற  தீர்ப்பை அவமரியாதை செய்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத  பிரதமர் மோடி  தமிழகம் வருவதை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் சென்னை அசோக் நகர் நூறடி சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில துணை தலைவர் கல்பாக்கம் மோகன் தலைமையில் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன் குமார் முன்னிலையில் மாநில பொருளாளர் டாக்டர் புழல்  ஏ.தர்மராஜ் கறுப்புக்கொடி ஏற்றி பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு உடை அணிந்து  கறுப்பு நிற பலூன்களை பறக்கவிட்டு கோஷங்கள் எழுப்பி  ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் ஜி. சந்தானம், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் வைகுண்டராஜா மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சி.எஸ்.விக்டர் மாவட்ட இணை  செயலாளர் அயன்புரம் மாரி மத்திய  சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சி.நாகராஜ் ,காஞ்சி மேற்கு மாவட்ட பொருளாளர் மாங்காடு முருககேசபாண்டியன், அண்ணாநகர் தொகுதி தலைவர் செல்வராஜ்,பெரம்பூர் தொகுதி தலைவர் வேலப்பன் எழும்பூர் தொகுதி தலைவர் சுந்தரலிங்கம் ,உள்பட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர். ,
About ptmkadmin