April 19, 2018

5 ம் ஆண்டு நினைவு நாள்

பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் அவர்களின் 5 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் டி அவர்களின் தலைமையில் போயஸ் கார்டனில் உள்ள அய்யா அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மருத்துவமுகாம் இரத்த தான முகாம் மற்றும் அன்னதானம் தலைவர் என் ஆர் டி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தலைவருடன் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ.தர்மராஜ், மாநில துணைத் தலைவர் கல்பாக்கம் மோகன், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி பி ஜயர், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா, மாவட்ட செயலாளர் கோயம்பேடு முத்து, வட சென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், கொளத்தூர் தொகுதி தலைவர் நீலகண்டன், வில்லிவாக்கம் தொகுதி தலைவர் ஜஸ்டின் சாம்ராஜ், எழும்பூர் தொகுதி தலைவர் சுந்தரலிங்கம், தி.நகர் தொகுதி தலைவர் செந்தூர்பாண்டியன், காஞ்சி மாவட்ட பொருளாளர் முருகேசபாண்டியன், ஆர் கே நகர் தொகுதி பொருளாளர் மாரிமுத்து, தென் சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் அருணாசலப்பாண்டியன் மற்றும் மாவட்ட வட்ட கிளை நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

About ptmkadmin