June 12, 2018

மறைவு!

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவரும் புரசை நேரு பூங்கா சேத்துப்பட்டு நாடார் சங்கத்தின் தலைவருமான மரியாதைக்குரிய ஏ.கப்பல்ராஜ் அவர்கள் உடல் நலம் குன்றி இன்று காலை 8 மணிக்கு காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை காலை 9 மணிக்கு ஓட்டேரியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு ஓட்டேரியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

திரு.கப்பல்ராஜ் அவர்கள் தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் மீதும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மீது வெறித்தனமான பற்று வைத்துள்ளவர்.எந்த நிகழ்ச்சி என்றாலும் முதல் ஆளாக வந்து நிற்பவர்.
பச்சை துண்டு தலைப்பாகையுடன் தான் வருவார்.ஆள் பார்க்க கரடு முரடான தோற்றத்தில் இருந்தாலும் வெள்ளை மனது கொண்டவர்.

மார்ச் மாதம் உடல் நலம் குன்றி இருந்த திரு.கப்பல்ராஜ் அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் நேரில் சென்று பார்த்து உடல் நலம்
விசாரித்தார்கள்
கப்பல் ராஜ் அவர்கள் தலைவர் என் ஆர் டி அவர்களின் முரட்டு பக்தன் என்று கூடச் சொல்லலாம்.

அவருடைய இழப்பு நம்முடைய பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு மட்டும் அல்ல.சமுதாயத்துக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் பேரிழப்பாகும்.அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

About ptmkadmin