November 22, 2022

இன்று உலக மீனவர் தினம் என்றதும் எம்.ஜி.ஆர்..பாடிய “தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்” என்கிற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

இன்று உலக மீனவர் தினம் என்றதும் எம்.ஜி.ஆர்..பாடிய “தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்” என்கிற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.கடலுக்கு போகும் மீனவர்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்து தான் தொழில் செய்கிறார்கள்.காற்று, மழை,சுனாமி, போன்ற பேரழிவுகள் வரும் என்று தெரிந்தும் அவர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவருக்கும் மீனவர் தின வாழ்த்துக்கள்.

News & Updates
November 22, 2022

வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த சமபவம் சினிமா உலகிற்கு பேரிழப்பாகும்.

மிக சிறந்த சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த சமபவம்  சினிமா உலகிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும்,உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பிலும் எனது சார்பிலும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

News & Updates
November 22, 2022

பெருந்தலைவர் மக்கள் கட்சி தென் சென்னை மேற்கு மாவட்டம் பரணிபுத்தூர் கிளை தலைவர் தி.சீனிவாசன் அவர்களுடைய புதுமனை புகுவிழா நேரில் வந்து அழைப்பிதழை வழங்கினார்கள்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தென் சென்னை மேற்கு மாவட்டம் பரணிபுத்தூர் கிளை தலைவர் தி.சீனிவாசன் அவர்களுடைய புதுமனை புகுவிழா அழைப்பிதழை  தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்களுக்கு  வழங்க மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் த உதயகுமார்,மாவட்ட தலைவர் ஆர். பாலமுருகன்.செயலாளர் சுப்பிரமணி மற்றும் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில்  வந்து அழைப்பிதழை வழங்கினார்கள்.

News & Updates
November 22, 2022

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னை கிரீன் வேஸ் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னை கிரீன் வேஸ் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் பூரணமாக குணமாகி வீட்டுக்கு வந்து தொடர்ந்து கட்சிப் பணி ஆற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

News & Updates
November 22, 2022

நெல்லை மாவட்டம் சுரண்டையில் சுரண்டை நாடார் வாலிபர் சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு நேரில் வந்திருந்து அழைப்பு விடுத்தனர்

நெல்லை மாவட்டம் சுரண்டையில் சுரண்டை  நாடார் வாலிபர் சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு  தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை  அழைப்பதற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு  சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.ராமர், பொருளாளர் ஜி.எஸ்.எஸ்.அண்ணாமலைக்கனி,துணைச்செயலாளர் கணபதிமுருகன்,செய்தித் தொடர்பாளர் ஏ.பி.என்.ஹரிராம்,மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் எஸ்.ஆனந்த் காசிராஜன் ஆகியோர் நேரில் வந்திருந்து அழைப்பு விடுத்தனர்

News & Updates
November 22, 2022

அரிமா சங்கம் மாவட்டம் 324 சார்பில் சென்னை வியாசர்பாடி வ.உ.சி. வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

அரிமா சங்கம் மாவட்டம் 324 சார்பில் சென்னை வியாசர்பாடி வ.உ.சி. வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த மாணவ – மாணவிகளை  தேர்வு செய்து அவர்களுக்கு நானும் மாவட்ட ஆளுநர் மணிவண்ணன் இணைந்து பரிசுகளை வழங்கினோம்.நிகழ்ச்சியில் முன்னாள் பன்னாட்டு அரிமா சங்க இயக்குனர் ஆர்.சம்பத்,ஆளுநர்கள் சி.சி.ஜானி, பாக்கியலட்சுமி,முதல் துணை ஆளுநர் ராஜேஸ்தவே ,இரண்டாம் துணை ஆளுநர் டி.முருகேஷ் குமார்,மாவட்ட செயலாளர் ஜி .எஸ்.பாலாஜி,பொருளாளர் மகேந்திரன்,அரிமா விஜயகுமார்,அரிமா பாலகுமார்,அரிமா வசந்தா ரவிச்சந்திரன் […]

News & Updates
November 22, 2022

தி.மு.க.முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களின் இல்லத் திருமணம்

தி.மு.க.முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நேற்று நவம்பர் 13 ந் தேதி மாலை நடைபெற்றது.நான் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

News & Updates
November 22, 2022

அயன்புரம் எஸ்.சௌந்தர் முருகன் – எஸ்.வள்ளி சௌந்தர் முருகன் ஆகியோரது மகள் பானுப்பிரியா – சதீஸ்குமார் திருமணம். மணமக்களை வாழ்த்தினேன்

அயன்புரம் எஸ்.சௌந்தர் முருகன் – எஸ்.வள்ளி சௌந்தர் முருகன்  ஆகியோரது மகள் பானுப்பிரியா – சதீஸ்குமார்  திருமண வரவேற்பு நேற்று நவம்பர் 13 ந் தேதி மாலை நடைபெற்றது.நான் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

News & Updates
November 22, 2022

மழையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்

அன்பிற்குரிய சமுதாய சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள். சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து அங்கங்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. பல இடங்களில் மழை  நீர் வடியாமல் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடிய நிலை உருவாகி உள்ளது. இன்னும் மூன்று நாளைக்கு மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.எனவே மழையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.அவர்களிடம் நாங்கள் இருக்கிறோம் என்ற தைரியத்தையும் ஆறுதலையும்  […]

News & Updates
November 22, 2022

முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளையும் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடுகிறோம்

முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளையும் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடி மகிழும் இந்த நேரத்தில் குழந்தைகள் இறைவனுக்கு சமம் என்பார்கள்.அவர்களுக்கு பொய் பேச தெரியாது.கள்ளங்கபடம் இல்லாமல்,சிரித்த முல்லையாய்,எதை பற்றியும் கவலை கொள்ளாமல் அனைவரது துன்பங்களையும் மறக்க செய்யும் ஒரு அற்புத பிறவி குழந்தைகள்.எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம்.அவர்களை ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடு அரவணைத்து அன்பை பொழிய  வேண்டும் என்று குழந்தைகள் தின விழாவில் கேட்டுக்கொள்கிறேன்.

News & Updates