May 27, 2022

சென்னை விமான நிலைய போராட்டத்துக்குப் பிறகு விமான நிலையத்தில் காமராஜர் படம் வைக்கப்பட்டிருக்கிறது!

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் நாடார் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற சென்னை விமான நிலைய போராட்டத்துக்குப் பிறகு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க கூடிய முக்கிய பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் படம் வைக்கப்பட்டிருக்கிறது. வெளியூர் செல்வதற்காக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மனைவி வயலட் தனபாலன் அவர்களுடன் இன்று விமான நிலையம் சென்ற போது காமராஜர் படத்தின் முன் நின்று மகிழ்ச்சியடன் புகைப்படம் எடுத்துக் […]

News & Updates
May 26, 2022

காமராஜர் பாதையில் தொடர்ந்து மனிதநேயர் திருமிகு.என்.ஆர்.தனபாலன் திருமண நாள் இன்று!

காமராஜர் பாதையில் தொடர்ந்து, அவரைப் போல நேர்மையாகவும் உண்மையாகவுகம் சமுதாயத்துக்காக உழைத்து வரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான மனிதநேயர் திருமிகு .என் ஆர்.தனபாலன் – வயலட் தனபாலன் அவர்கள் திருமண நாளில் அவர்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் அவர்கள் இருவரும் மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு இல்லாமல் அடுத்தவர்களுடைய நிலையறிந்து உதவி செய்து பல குடும்பத்திற்கு விளக்கேற்றி வைத்துக்கொண்டு இருக்கும் நீங்கள் இன்னும் பல நூறாண்டு இன்று போல என்றும் […]

News & Updates
May 17, 2022

திரைப்பட இயக்குனர் பகவதி பாலா தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்தார்

பிரபல திரைப்பட இயக்குனர் பகவதி பாலா அவர்கள் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை  மரியாதை நிமித்தமாக சந்தித்து அரை மணி நேரம் திரைப்படத்துறை, சமுதாயம் மற்றும் பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.

News & Updates
May 13, 2022

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா இல்ல திருமானவிழா நிகழ்ச்சியில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்!

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்கள் மகன் நெல்சன் மண்டேலா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் உடன் இருந்தனர்.

News & Updates
April 29, 2022

மாநில மருத்துவரணி பொருளாளராக டாக்டர் பி.பொன் .சத்யா நியமனம்!

தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில மருத்துவரணி பொருளாளராக தூத்துக்குடி டாக்டர் பி.பொன் .சத்யா அவர்களை தலைவர் என்.ஆர்.தனபாலன் நியமனம் செய்தார்கள் டாக்டர்.பொன்.சத்யா அவர்கள் இன்று ஏப்ரல் 29 ந் தேதி வெள்ளிக்கிழமை காலை பேரவையின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து பணி நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டார்.பேரவையின் மாநில தலைமை நிலைய சொல்லார் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் ஆகியோர் பொன் .சத்யாவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.

News & Updates
April 23, 2022

பிறந்தநாள் விழாவில் தலைவர் என்.ஆர்.தனபாலன் வாழ்த்து!

அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர்  கே.எஸ்.எம்.கார்த்திகேயன் அவர்களுடைய மகன் கா.மகிழன்ராஜா  பிறந்தநாளை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேற்று ஏப்ரல் 22 ந் தேதி இரவு 8 மணிக்கு கே.எஸ்.எம்.கார்த்திகேயன்  வீட்டுக்கு சென்று குழந்தையை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் உடன் இருந்தனர்.

News & Updates
March 22, 2022

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் நேரில் சந்தித்தார்!

திருச்சியில் தங்கியிருந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் திருச்சியில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தார்கள்.அருகில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்உள்ளார். தலைவருடன் மாநில பொருளாளர் துறையூர் பெ.பிரபாகரன், மாநில வர்த்தகரணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார், தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் […]

News & Updates
March 10, 2022

சென்னை மண்டல தலைவர் செ.அருணாச்சல மூர்த்தி அவர்களுடைய மனைவி ஏ.தமிழ்செல்வி காலமானார்

சென்னை பட்மேடு நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளரும்  தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலத் தலைவருமான செ.அருணாச்சல மூர்த்தி அவர்களுடைய மனைவி ஏ.தமிழ்செல்வி  (வயது 48) காலமானதையொட்டி  தமிழ்நாடு பேரவைத் தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று மதியம் அன்னாருடைய வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு செ.அருணாச்சல மூர்த்திக்கு ஆறுதல் கூறினார்கள்.

News & Updates
February 5, 2022

தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பாலமுருகன் தனது 23 வது திருமண நாள்

இன்று திருமணநாள் காணும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பாலமுருகன் தனது 23 வது  திருமண நாளை முன்னிட்டு தன்னுடைய குடும்பத்துடன் இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News & Updates