தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுடைய மாமனார் காளியண்ணன் அவர்கள் நேற்று அக்டோபர் 27 ந் தேதி மாலை சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றிய த்திற்கு உட்பட்ட தேவூரில் காலமானார்கள். செய்தியை கேள்விப்பட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் இன்று அக்டோபர் 28 ந் தேதி மாலை 3மணிக்கு தேவூருக்கு சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து துக்கம் விசாரித்தார்கள்.
தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம். வைகுண்டராஜா, சேலம் மாநகரத்தலைவர் எஸ்.சதாசிவம், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.பி.சந்திரன்,செயலாளர் காளியப்பன்,மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன்,இடங்கனசாலை கிளைத்தலைவர் கந்தசாமி, எடப்பாடி ஒன்றிய துணைச்செயலாளர் தீபன் சேசுராஜ்,தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில இளைஞரணி தலைவர் சிலம்பரசன்,தாரமங்கலம் கமலக்கண்ணன் மற்றும் பலர் கொண்டனர்.