திருச்சி் மாவட்டம் மனப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றவேளையில் இன்று அக்டோபர் 28 ந் தேதி இரவு 9மணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் நடுகாட்டுப்பட்டிக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு குழந்தை சுர்ஜித்தின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அத்தோடு அங்கு கடந்த நான்கு நாட்களாக ஊன் உறக்கமின்றி அங்கேயே இருந்து மீட்பு பணியை முடுக்கிவிட்டு கொண்டு இருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஐயபாஸ்கர்,அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி ஆகியோரை சந்தித்து மீட்பு பணியின் விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,சென்னை மாவட்ட தலைவர் எம். வைகுண்டராஜா, திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் பெ.பிரபாகரன்,மாவட்ட அவைத்தலைவர் குருசாமி,துறையூர் நகரத்தலைவர் துரைப்பாண்டி,நகரசெயலாளர் ரவி,மாவட்ட இளைஞரணி தலைவர் சூரியபிரகாஷ்,திருச்சி மத்திய மாவட்ட தலைவர் போஸ்.செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.