October 6, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் எமர்ஜென்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்!

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வாசு அவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த காயத்துடன் ஈரோடு வீரப்பபாளையத்தில் உள்ள ஈரோடு எமர்ஜென்சி
மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று காலை ஈரோட்டுக்கு நேரில் வந்து மருத்துவமணைக்கு சென்று அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வாசுவை தலைவர் பார்த்ததோடு மருத்துவமனண டாக்டரிடம் வாசுவுக்கு அளித்து வரும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்கள். தொடர்ந்து வாசுவின் மனைவி வித்யா மற்றும் வாசுவின் அக்கா செல்வி,தம்பி குமார் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்கள்.

தலைவருடன் மாநில செயலாளர் ஜோ.ஆசைத்தம்பி,மாநில பொருளாளர் பெ.பிரபாகரன், தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார் உயர்நிலைக்குழு உறுப்பினர் சி.தங்கதுரை,ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,துனணத்தலைவர் கேசவராஜ், அம்மா பேட்டை ஒன்றியத்தலைவர் காளியப்பன் அந்தியூர் ஒன்றிய தலைவர் சக்திவேலன் செயலாளர் சென்னியப்பன் பொறுப்பாளர் கார்த்திக் அந்தியூர் ஒன்றிய மகளிரணி தலைவி கிருஷ்ணவேணி செயலாளர் தங்கம்மாள் தென்மாவட்ட நாடார் சங்க தலைவர் நெல்லை மகாதேவன் தமிழ்நாடு நாடார் பேரவை அந்தியூர் ஒன்றிய பொறுப்பாளர் கனகராஜ் கருவல்வாடி புதூர் கிளை செயலாளர் செந்தில்குமார் ஈரோடு மாநகரத்தலைவர் பழனிச்சாமி ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் நடராஜன் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் இளைஞரணி செயலாளர் ராசுக்குட்டி மற்றும் பல நிர்வாகிகள் தலைவருடன் சென்றனர்.

WhatsApp Image 2021-10-06 at 11.45.40 AMWhatsApp Image 2021-10-06 at 11.45.38 AMWhatsApp Image 2021-10-06 at 11.45.40 AM (1) WhatsApp Image 2021-10-06 at 11.45.38 AM

News & Updates
About ptmkadmin