October 16, 2021

இரங்கல் செய்தி

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் திருத்தணி ஆர்.காசிநாதன் (வ யது 70 )இன்று மதியம் காலமானார் என்ற செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். காசிநாதன் தமிழ்நாடு நாடார் பேரவையாகட்டும் பெருந்தலைவர் மக்கள் கட்சியாகட்டும் எந்த நிகழ்ச்சிக்கு நான் அழைத்தாலும் திருத்தணியில் இருந்து ஒரு வேன் நிறைய நிர்வாகிகளை அழைத்து வநது சிறப்பிப்பார்.
சென்னை தி.நகரில்
ம.பொ.சி.அவர்களுக்கு சிலை வைப்பதற்கு முன்பு வரை அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் 10,20 வண்டிகளில் திருத்தணிக்கு வந்து ம.பொ.சி.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு மண்டபத்தில் கூட்டம் போட்டு மரியாதை செய்வோம்.இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் முழுவதையும் காசிநாதன் அவர்கள் தான் முன்நின்று செய்வார்.அப்படிப்பட்ட காசிநாதன் இன்று நம்மிடையே இல்லை என்கிற போது வேதனையாக இருக்கிறது.
அவருடைய இழப்பு என்பது நமக்கு மட்டுமல்ல அவருடைய குடும்பத்தாருக்கு பேரிழப்பாகும். அவருடைய ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாறட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்கள்.

 

News & Updates
About ptmkadmin