November 16, 2021

மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.தாளைக்கண்ணன் – ஜெயஜோதி இல்ல விழாவில் தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு செல்வி அருந்ததியை வாழ்த்தினார்கள்!

தமிழ்நாடு நாடார் பேரவை மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.தாளைக்கண்ணன் – ஜெயஜோதி ஆகியோரது மகள்
த.அருந்ததியின் பூப்புனித நீராட்டு விழா நேற்று நவம்பர் 14 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மதுரையில் நடை பெற்றது.
விழாவில் பேரவையின் தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செல்வி அருந்ததியை ஆசிர்வதித்து வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் நாடார்கள் முன்னேற்ற சங்கத்தலைவர் பெரிஸ் பி.மகேந்திரவேல், மதுரை சிம்மக்கல் நாடார் உறவு முறை பொது செயலாளர் ஆர்.வி.டி.ராமையா ஆகியோர் செல்வி அருந்ததியை வாழ்த்தினார்கள்.

விழாவில் தலைவருடன் பேரவையின் மாநில பொருளாளர் எஸ்.சதாசிவம், மாநில துணை பொதுச்செயலாளர் கே.வெற்றி ராஜன், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் அருணா காமராஜ், மாநில துணைத் தலைவர் மாயாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாநில மகளீர் பேரவையின் தலைவர் ஹெலன் செல்வராஜ், மகளீர் பேரவையின் அமைப்பாளர் மலர்க்கொடி, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டி.எஸ்.வெங்கடேஷ் ராஜா, மதுரை புற மாவட்ட தலைவர் பெரியசாமி, மதுரை மாநகர் மாவட்ட மகளீரணி இணை செயலாளர் கலா, துணைச்செயலாளர் மகளீரணி, ஜோசப் வாசு தேவன் மற்றும் பேரவை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2021-11-16 at 10.38.08 AM (1) WhatsApp Image 2021-11-16 at 10.38.08 AM (2)

News & Updates
About ptmkadmin