December 9, 2021

முன்னாள் ஒன்றிய செயலாளர் கோசல்ராம் அவர்களின் இல்ல திருமணத்திற்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்!!

தமிழ்நாடு நாடார் பேரவையின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியத்தின் முன்னாள் ஒன்றிய செயலாளர் கோசல்ராம் அவர்களின் இரண்டாவது மகனும் இன்றைய ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் கோ.பேச்சியப்பன் அவர்களின் தம்பியுமான கோ.தங்கராஜ் திருமணம் நெல்லை மாவட்டம் ராயகிரியில் இன்று டிசம்பர் 8ந் தேதி காலை நடைபெற்றது. தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக தலைவருக்கு ராயகிரி நாடார் உறவின்முறை தலைவர் அம்மையப்பன் அவர்கள் தலைமையிலும் தமிழ்நாடு நாடார் பேரவை ராயகிரி நகரத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து ராயகிரியில் உள்ள காமராஜர் சிலைக்கு தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
தலைவருடன் பேரவையின் மாநில துணைத்தலைவர் வன்னியம்பட்டி பத்மநாதன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்ஆர்சிவகுமார் புதுவை மாநில செயலாளர் கே.கே.சாமி மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் கே.வி.குமார் மாவட்ட செயலாளர் ஜோசப் ஆரோக்கிய ராசையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News & Updates
About ptmkadmin