March 22, 2022

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் நேரில் சந்தித்தார்!

திருச்சியில் தங்கியிருந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் திருச்சியில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தார்கள்.அருகில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்உள்ளார்.
தலைவருடன் மாநில பொருளாளர் துறையூர் பெ.பிரபாகரன், மாநில வர்த்தகரணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார், தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் டி.உதயகுமார், செயலாளர் ஆர்.பாலமுருகன், பொருளாளர் எம்.சுப்பிரமணி,திருச்சி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் குருசாமி, தொப்பம்பட்டி ஒன்றிய தலைவர் ராஜா, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் அன்பு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News & Updates
About ptmkadmin