July 12, 2022

காமராஜரின் 120வது பிறந்த முன்னிட்டு ஜூலை 31 கல்வித்திருவிழாவில் என்ஆர்.தனபாலன் கலந்து கொள்கிறார்!

பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய நாடார் மகாஜன சபை சார்பில் மாபெரும் கல்வித்திருவிழா ஜூலை 31 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு குமணன் சாவடியில் நடக்கிறது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம்.கார்திகேயன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கினார். உடன் நிர்வாகிகள் இருந்தனர்.

News & Updates
About ptmkadmin