July 12, 2022

பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்தநாளில் அன்னதானத்தை தொடங்கி வைக்க தலைவர் என்.ஆர்.தனபாலனுக்கு அழைப்பு!

கோயம்பேடு வட்டார நாடார்கள் சங்கத்தின் சார்பில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15 ந் தேதி கோயம்பேடு வட்டார நாடார் சங்கம் காமராஜர் மாளிகையில் பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்க இருக்கிறது.  அன்னதானத்தை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் என்.ஆர்.பி.ஆதித்தன், துணைசெயலாளர் ஜி.சிவமுருகேசன் ஆகியோர் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்கள்.
அருகில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம். வைகுண்டராஜா மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவைியின் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் மணிராஜ் உள்ளனர்.

News & Updates
About ptmkadmin