July 12, 2022

முப்பெரும் விழாவிற்கு தலைவர் என்.ஆர்.தனபாலனை சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கினார்கள்!

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகா மம்சாபுரம் – சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா,அடுத்து சிவந்திபட்டி நாடார் பள்ளி வளாகத்தில் காமராஜர் சிலை திறப்பு விழா மற்றும் அச்சம் அகற்றிய அண்ணல் W.P.A. செளந்திரபாண்டியனார் சிலை திறப்பு விழா என முப்பெரும் விழா ஜூலை 11ந் நடக்கிறது.
விழாவில் செளந்திரபாண்டியனார் மணிமண்டபத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்ற வருகை தரும் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்களை இன்று உறவின்முறை பொருளாளர் D.குமார்,பள்ளித்
தலைவர் கணேசன் ,நிர்வாகி M.தனசேகர் மற்றும் நிர்வாகிகள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து முப்பெரும் விழா அழைப்பிதழை வழங்கினார்கள்.

News & Updates
About ptmkadmin