July 19, 2022

காமராஜர் 120வது பிறந்தநாள் விழா தலைவர் என்.ஆர்.தனபாலன் நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்!

கெருகம்பாக்கம் நாடார் சங்கத்தின் சார்பில் காமராஜர் 120 வது  பிறந்தநாள், சங்கத்தின் குடும்ப விழா, சங்கத்தின் 4 ம் ஆண்டு விழா என முப்பெரும் விழா ஜூலை 17  ந்  தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி கெருகம்பாக்கத்தில் நடைபெற்றது. விழா சங்கத்தின் தலைவர் தி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் ஆர்.பாலமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் காமராஜர் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர்  மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நலிந்தோருக்கு நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா,பெருந்தலைவர் மக்கள் கட்சியின் வர்த்தகரணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ் குமார்,தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,செய்தித் தொடர்பாளர் ஜி .சந்தானம்,மாநில இளைஞரணி தலைவர் என்.ஆர்.டி.பிரேம்குமார், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் எம்.வைகுண்டராஜன்,மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர்,தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஈகை விஜயன்,பொருளாளர் நடராஜன்,இளைஞரணித் தலைவர் முருகன்,காஞ்சி மாவட்ட பொருளாளர் ஏ.முருகேச பாண்டி,குன்றத்தூர் ஒன்றிய தலைவர் ஏ.சி.தர்மராஜ் பல்லாவரம் தொகுத்தலைவர் ராஜ் நாடார்,தி.நகர் தொகுதி
தலைவர் எம்.எம்.டி.ஏ.பாலமுருகன்,விருதை தொகுதி தலைவர் மணிராஜ்,தென் சென்னை மேற்கு மாவட்ட மகளிரணி தலைவர் கே.சிவஜோதி,சைதை பகுதி தலைவர் காந்திமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்..முடிவில் சங்கத்தின் பொருளாளர் எம்.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

WhatsApp Image 2022-07-18 at 12.59.08 PM

News & Updates
About ptmkadmin