August 18, 2022

“நெல்லை கண்ணன் அவர்கள் காலமான செய்தி கேள்விப்பட்டு வருத்தமுற்றேன்” என்று என்.ஆர்.தனபாலன் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்!

பிரபல இலக்கியவாதியும், பட்டிமன்ற பேச்சாளரும், எழுத்தாளரும். மூத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நெல்லை கண்ணன் அவர்கள் காலமான  செய்தி கேள்விப்பட்டு வருத்தமுற்றேன். மேடைகளில் பேசும் போது காமராஜர் பற்றி குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அந்த அளவுக்கு காமராஜரின் உண்மை விசுவாசி. நெல்லை தமிழ் பேசி அனைவரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய வ்ர். பழகுவதற்கு இனிமையானவர். எதையும் தைரியமாக பேசக்கூடியவர். அப்படிப்பட்டவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார்  சார்பிலும் என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று என்.ஆர்.தனபாலன் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்கள்.

News & Updates
About ptmkadmin