September 1, 2022

திருமதி. T.லீலாவதி அம்மா அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்தார் !

நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன  சங்க செயலாளரும் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனரும்  நெல்லை தட்சிணமாற நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளருமான  தம்பி T.ராஜ்குமார் அவர்களின் தாயார் திருமதி. T.லீலாவதி அம்மா ( வயது 84 ) அவர்கள் காலமான செய்தியை கேள்விப்பட்டு மிகவும் துயறுற்றேன். அம்மா அவர்களுக்கு எங்கள் ஊர்  வாழையடி என்றாலும் மிகவும் செல்வாக்கான குடும்பம்.ஊரில் எந்த நிகழ்ச்சி என்றாலும் முன்நின்று நடத்தக் கூடியவர்கள் . அவர்கள் இழப்பு என்பது பேரிழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் ராஜ்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது சார்பிலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடு நாடார் பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்கள் .

WhatsApp Image 2022-09-01 at 12.34.59 PM

News & Updates
About ptmkadmin