November 30, 2022

திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தொடங்கிய அம்மா உணவகங்களை மூடி ஏழைகளுடைய வயிற்றில் அடித்தார்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும்  தொடங்கிய அம்மா உணவகம் குறைந்த விலையில்  நல்ல முறையில் இயங்கி ஏழைகளுக்கு  உணவு வழங்கி வந்தது..அதன்  மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் தங்கள் பசியை போக்கிக் வந்தார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் அங்கங்கே அம்மா உணவகங்களை மூடி ஏழைகளுடைய வயிற்றில் அடித்தார்கள்.கடமைக்கு ஏதோ ஒரு சில இடங்களில் மற்றும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன .அதுவும் முறையான பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்னை நகர  மேயர் பிரியா அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் தரமற்ற உணவகங்களை குறிப்பிட்டால் ஆய்வு செய்து தரம் உயர்த்தப்படும் என்று கூறியிருப்பது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல் செயலில் இறங்கி  நடைமுறைப்படுத்தி மீண்டும்  ஏழைகளுக்கு நிரந்தர உணவுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

About ptmkadmin