December 1, 2022

தமிழகத்தை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் பெருகி வருகின்றன. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை

தமிழகத்தை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் பெருகி வருகின்றன சென்னை மணலி யை சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் தனது மனைவி மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கிய  பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்.  இதுவரை தமிழகத்தில் மட்டும் 34 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்திருக்கிறார்கள்.இது மிகவும் வேதனையான விஷயம்.சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டத்தை  தடை செய்ய  நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.எனவே ஆளுநர் அவர்கள் தமிழக மக்களின் நலன் கருதி தொடரும் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஆன்லைன் சூதாட்ட சட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு மீண்டும்  பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

About ptmkadmin