December 3, 2022

மாற்றுத்திறனாளிகள் எப்போதும் தன்னம்பிக்கை நிரம்பியவர்கள், சமுதாயத்தில் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் எப்போதும் தன்னம்பிக்கை நிரம்பியவர்கள்  மற்றவர்களைப் போல் அவர்களும் எத்தனையோ துறைகளில் சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடலில் தான் பிரச்சினை தவிர உள்ளத்திலும் இல்லை உழைப்பிலும் இல்லை.சமுதாயத்தில் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்க வேண்டும்.நாம் அவர்களுக்கு உதவுவது என்பது இரக்கப்பட்டு அல்ல .அது நமது கடமை என்று ஒவ்வொருவரும் எண்ண  வேண்டும். தமிழக அரசு அவர்களுக்கு பல சலுகைகளை வழங்கினாலும் இன்னும் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் கூறியுள்ளார்கள்.

About ptmkadmin