December 21, 2022

தமிழ்நாடு நாடார் பேரவையின் ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவராக ஈரோடு தீ.ராஜேஷ்குமார் அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் அவர்களின் பரிந்துரையின் படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நியமனம் செய்தார்கள்.

தமிழ்நாடு நாடார் பேரவையின் ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு  புதிய மாவட்ட தலைவராக ஈரோடு தீ.ராஜேஷ்குமார்  அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் அவர்களின் பரிந்துரையின் படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நியமனம் செய்தார்கள்.     ஈரோடு தீ.ராஜேஷ்குமார்  அவர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து நன்றியை தெரிவித்தார்.தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் ஈரோடு தீ.ராஜேஷ்குமார் அவர்களுக்கு நியமன கடிதத்தை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.அருகில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பெ.பிரபாகரன்,கரூர் மாவட்ட செயலாளர் சேகர்,தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில துணைத் தலைவர் கரூர் பி.லோகநாதன் கரூர் மாவட்ட அமைப்பாளர் கூடலரசன் ஆகியோர்  உள்ளனர்.

About ptmkadmin