About ptmkadmin

July 14, 2022

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை தலைவர் என்.ஆர்.தனபாலன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்!

அ.இ.அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி  கே.பழனிச்சாமி அவர்களை பசுமைவழிச்சாலை  முகாம் இல்லத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சந்தித்து பொன்னாடை  அணிவித்து மலர்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

News & Updates
July 12, 2022

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்முவை சந்தித்து தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆதரவு தெரிவித்தார்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா கூட்டணி வெற்றி வேட்பாளர் திரவுபதி முர்மு அவர்கள் நேற்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் திரவுபதி முர்மு அவர்களுக்கு  சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தலைவருடன்  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில வர்த்தகரணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா ஆகியோர் உள்ளனர்.

News & Updates
July 12, 2022

சங்கத்தின் ஆண்டு விழாவிற்கான அழைப்பிதழை தலைவர் என்.ஆர்.தனபாலனிடம் வழங்கினார்கள்!

போரூர் வட்டார நாடார்கள் மகிமை சங்கத்தின் 47 ம் ஆண்டு விழா ஜூலை 31 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை போரூரில் நடைபெற இருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவைத்தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கு சங்கத்தின் தலைவர் வி.ஆனந்தராஜ், துணை பொதுச்செயலாளர் கே.என்.ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்த்தித்து ஆண்டு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்கள்.

News & Updates
July 12, 2022

முப்பெரும் விழாவிற்கு தலைவர் என்.ஆர்.தனபாலனை சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கினார்கள்!

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகா மம்சாபுரம் – சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா,அடுத்து சிவந்திபட்டி நாடார் பள்ளி வளாகத்தில் காமராஜர் சிலை திறப்பு விழா மற்றும் அச்சம் அகற்றிய அண்ணல் W.P.A. செளந்திரபாண்டியனார் சிலை திறப்பு விழா என முப்பெரும் விழா ஜூலை 11ந் நடக்கிறது. விழாவில் செளந்திரபாண்டியனார் மணிமண்டபத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்ற வருகை தரும் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் […]

News & Updates
July 12, 2022

தலைவர் என்.ஆர்.தனபாலன் தனது தாயாரின் 5-ஆம் ஆண்டு நினைவு நாளில் நினைவிடத்தில் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர்!

தலைவர் என்.ஆர்.தனபாலன் தனது தாயாரின் 5-ஆம் ஆண்டு நினைவு நாளில் நினைவிடத்தில் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர்.

News & Updates
July 12, 2022

சுதந்திரபோராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் சிலைக்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்தார்!

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 265வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானந்தம், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் வியாசை கனகராஜ், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எல்.சுந்தரலிங்கம்,தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் […]

News & Updates
July 12, 2022

காமராஜரின் 120வது பிறந்த முன்னிட்டு ஜூலை 31 கல்வித்திருவிழாவில் என்ஆர்.தனபாலன் கலந்து கொள்கிறார்!

பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய நாடார் மகாஜன சபை சார்பில் மாபெரும் கல்வித்திருவிழா ஜூலை 31 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு குமணன் சாவடியில் நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம்.கார்திகேயன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கினார். உடன் நிர்வாகிகள் இருந்தனர்.

News & Updates
July 12, 2022

பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்தநாளில் அன்னதானத்தை தொடங்கி வைக்க தலைவர் என்.ஆர்.தனபாலனுக்கு அழைப்பு!

கோயம்பேடு வட்டார நாடார்கள் சங்கத்தின் சார்பில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15 ந் தேதி கோயம்பேடு வட்டார நாடார் சங்கம் காமராஜர் மாளிகையில் பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்க இருக்கிறது.  அன்னதானத்தை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் என்.ஆர்.பி.ஆதித்தன், துணைசெயலாளர் ஜி.சிவமுருகேசன் ஆகியோர் சந்தித்து […]

News & Updates
June 8, 2022

ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது!

ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில்  நாடார் மகாஜன சங்க தலைவர் முத்துசாமி நாடார், தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் N.R. தனபாலன். நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் கட்சியின்  தலைவர் எர்ணாவூர் A. நாராயணன், நாடார் முன்னேற்ற சங்கத்தின் பொது செயலாளர் பெரிஸ் P.மகேந்திர வேல், நெல்லை நாடார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் T.ராஜ்குமார், வழக்கறிஞர் ஆஞ்சநேயா T.சேகரன்  நாடார் பேரவையின் பொருளாளர் […]

News & Updates